யாழில் 40 அடி உயரத்தில் பறந்த இளைஞன் ; விடுத்த உருக்கமான கோரிக்கை
யாழ்.பருத்தித்துறை - புலோலியில் பட்டம் ஏற்ற சென்ற இளைஞன் பட்டத்தின் கயிற்றில் தொங்கிய நிலையில் சுமார் 40 அடி உயரத்திற்கு இளைஞன் துாக்கி செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து நடராசா மனோகரன் என்ற குறித்த இளைஞன் கூறுகையில்,
நாங்கள் பட்டம் விட்டுகொண்டிருந்தபோது பட்டத்தின் கயிற்றை ஒரு மரத்தில் கட்டி வைத்து விட்டு, பட்டம் ஏற்றியநிலையில் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் கைவிட்டுள்ளனர். நான் முன்னால் நின்றேன் எல்லோரும் கைவிட்டுவிட்டார்கள் எனக்கு அது தொியாது.
இதனால் 2 தடவை பட்டம் மேலே துாக்கியது, அப்போது நான் கைவிடவில்லை. பின்னர் 3வது தடவையாக மேலே துாக்கியது. நூல்ய்டன் உச்சத்தில் இருந்தபோது நான் சாகப்போகிறேன் என நினைத்தேன்.
கீழே இருந்தவர்கள் என்னை காப்பாற்ற முயற்சித்தார்கள். ஒரு கட்டத்தில் கீழே வந்துவிட்டேன் என நினைத்தே என் கையை விட்டேன். விழுந்தவுடன் மயங்கிவிட்டேன் அதற்குப் பின்னர் வைத்தியசாலை சென்று 3 நாட்களின் பின் வந்திருக்கிறேன்.
3 மாதங்கள் இயங்க முடியாத நிலையில் உள்ளதுடன், இடுப்பு பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பட்டம் விடும் சிறுவர்கள் மிக அவதானமாக இருக்கவேண்டும் என கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
யாழில் ஆகாயத்தில் பறந்த இளைஞன் உயிர்தப்பிய அதிசயம்! பெரும் பரபரப்பு