ஒருதலைக் காதலால் இடம்பெற்ற விபரீதம்...7 பேர் கைது
மட்டக்களப்பு ஜெயந்திபுரத்தில் பெண்ணொருவரின் உறவினர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு கும்பலைச் சேர்ந்த ஏழு பேரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள பெண் ஒருவரை இளைஞன் காதலித்து வந்ததாகவும், அவர் நிராகரித்ததையடுத்து அந்த இளைஞன் துன்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெண்ணின் உறவினருக்கும், இளைஞருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 9ஆம் திகதி பெண்ணை காதலித்த இளைஞன் தனது குழுவுடன் இருந்த பெண்ணின் உறவினர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் உட்பட 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், நேற்றிரவு பொலிஸார் ஓடிய 7 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து வாள்கள் மற்றும் கத்திகளை மீட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டு பொலிஸ் தலைமையகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.