இந்திய கியூபிரிவினரால் 65இலங்கையர் திடீர் கைது
கனடா செல்வதற்காக இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக சென்று தங்கியிருந்த இலங்கையர்கள் 65பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் மதுரையில் இலங்கையர்கள் சட்டவிரோதமாக வந்து தங்கியிருப்பதாக ‘கியூ’ பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மதுரை பொலிஸாரால் 27 இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 38 பேர் பெங்களூரில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. பெங்களூரின் மங்களூர் பகுதியில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்த இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கனடாவிற்கு ஆட்களை அனுப்பும் முகவர்களை இனங்கண்டே இவர்கள் இந்தியாவிற்கு சென்றுள்ளனர். முன்னதாக தமிழ்நாட்டில் தங்கியிருந்தவர்கள் தேர்தல் காலத்தில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கைகளை அடுத்து ஒரு குழுவினர் பெங்களூர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆரம்பத் தொகையாக ஒருவரிடமிருந்து தலா இரண்டு இலட்சம் ரூபாய் அளவில் முகவர்கள் பணம் பெற்றுள்ளனர்.
‘கியூ’ பிரிவினர் வழங்கிய தகவலையடுத்து பெங்களூர் நகர பொலிஸாரால் 38 இலங்கையர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் அதிகமானவர்கள் இலங்கையின் வட பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.