600 கோடி ரூபா பணப்பரிமாற்றம்; பெண் கைது!
நான்கு ஆண்டுகளில் ஐந்து கணக்குகள் மூலம் ரூ .600 மில்லியன் பணப்பரிவத்தனையில் ஈடுபட்ட ஒரு பெண்ணை சி.ஐ.டி யினர் தெஹிவளையில் கைது செய்துள்ளனர்.
இந்த கணக்குகள் போதைப்பொருள் கடத்தல் தொடர்பானவை என தகவல் வெளிவந்துள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 41 வயது பெண், பண மோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் உள்நாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர்களும், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களும் அந்தப் பெண்ணின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.