ஐ.டி.எச் மருத்துவமனையில் 15 சிறுவர்கள் அனுமதி
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 15 சிறுவர்கள் ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையில் இயக்குனர் டாக்டர் ஹசித அத்தநாயக்க கூறுகிறார்.
எனினும், இந்த சிறுவர்கள் எவருக்கும் கடுமையான பாதிப்புகள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, புதிய கொரோனா அலை மூலம் சிறுவர்களே அதிகமாக பாதிக்கப்படுவதாக டாக்டர் ஹசித அத்தநாயக்க தெரிவித்தார்.
இந்நிலையில் நாட்டில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரிப்பு இருப்பதாகவும் இயக்குனர் கூறினார்.
தற்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக, ஐ.டி.எச் வைத்தியசாலையில் கடுமையான இட நெரிசலில் உள்ளதாகவும் , எனினும் நிலைமை சிறப்பாக நிர்வகிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.