சீரற்ற காலநிலை; 11,542 பேர் பதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 2,750 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 11,542 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சபரகமுவ, மேல், வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களில் உள்ள மக்களே இவ்வாரு பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை கேகாலை மாவட்டத்தின் வரகாபொலவிலும், காலி மாவட்டத்தின் நாகொடவிலும் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன.
அந்த அறிக்கையின்படி, வீடுகளுக்கு முழுமையான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் 205 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பில் உள்ள 42 குடும்பங்களைச் சேர்ந்த 175 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.